வேலூர் (கி) மாவட்ட மஜக சார்பாக தேசிய கொடி ஏற்றம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!

image

image

image
image

வேலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இந்திய திருநாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்ஸர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார்.

முதற்கட்டமாக, காலை 8.00 மணியளவில் காட்பாடி 1வது வார்டு கிளையின் சார்பாகவும்,

அடுத்தபடியாக, காலை 9.00 மணியளவில் R.N.பாளையம் 53வது வார்டு கிளையின் சார்பாகவும், தேசிய கொடியை மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் ஏற்றி வைத்தார்.

அடுத்தகட்டமாக காலை 9.30 மணியளவில் 31 வது வார்டு B.T.C. ரோட்டிலும்,

காலை 10.00 மணியளவில் 56 வது வார்டு கொணவட்டத்திலும், தேசிய கொடியை மாவட்ட அமைப்புக்குழு தலைவர் ஏற்றிவைத்தார். மஜகவின் வாழ்த்து முழக்கத்தை மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் கூறினார். பிறகு பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம், பென்சில் இனிப்பு வழங்கப்பட்டது

இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் யாசீன், ஜாகிர் உசேன், சையத் உசேன். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி, மற்றும் 1வது வார்டு, 53வது வார்டு கிளைகளின் நிர்வாகிகள், மற்றும் மாநகரின் பல பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

AZAADI KI KABHI SHAAM NAHIN HONE DENGE, HAMAARI WATHAN KI KHUSHBU NAKAAM HONE NAHIN DENGE,

BAAQHI HO JO AIK BOONDH BHI LAHU KI, SHAHIDOON KI QHURBANI BADNAAM NAHIN HONE DENGE…

தகவல்:
மனிதநேய ஜனநாயக கட்சி.
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING).
15.08.2017
வேலூர் கிழக்கு மாவட்டம்.