எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

image

image

திணடு்க்கல்.ஆகஸ்ட்.15., இன்று
71-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் நினைபடுத்தியும், பாசிச பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

பேருந்துகளில் சென்றவர்கள் அனைவருக்கும் தேசிய கொடி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர் பொறுப்பு குழு நிர்வாகிகள்,  வர்த்தக அணி  நிர்வாகிகள், பள்ளிக்கூட மாணவிகள், கூலி தொழிலாளர்கள்,  பொது மக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திண்டுக்கல் மாவட்டம்.
15/08/2017.