இளையான்குடி நகரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்கள்..!!

image

image

image

சிவகங்கை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில்  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் 12.08.17 சனிக்கிழமையன்று நடைபெற்றது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் மஜக ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இளையான்குடி நகர மஜக சார்பில் பேருந்துநிலையம், பொதுமக்கள் கூடும் இடம், ஆட்டோ நிறுத்தம் மற்றும் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார், பேருந்து மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தேடி சென்று நிலவேம்பு கசாயத்தை மஜக மாநில பொருளாளர் வழங்கினார்கள்.

நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, இஸ்லாமிய கலாச்சார பேரவை குவைத் மண்டல செயலாளர்  சீனி முஹம்மது ஆகியோருடன்,

நகர துணைச் செயலாளர்கள் செய்யது மஹபூப், சிராஜ் அஹமது, ஜமால் முஹம்மது, ஜஹபர் சாதிக், உஸ்மான், முத்து முஹம்மது, முஸ்தபா மற்றும் சல்லை காஜா உள்ளிட்ட  நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சிவகங்கை மாவட்டம்.
12.08.2017.