இராமநாதபுரம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் கலந்துரையாடல்…!

image

image

image

image

இராமநாதபுரம்.ஆக.06., இன்று இராமநாதபுரம் ஐக்கிய ஜமாத் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எமனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பரமக்குடி வட்டார ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

இதில் மஜக பொருளாளர் S.S.ஹாரூன் ரசீது, இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நிறைவாக பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள். “பண்மை சமூக அமைப்பில் சிறுபான்மையினர் எவ்வாறு பிரச்சனைகளை எதிர்கொள்வது” என்று விரிவாகவும், ஆழமாகவும் பேசினார்.

பிறகு ஜமாத்தார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிகழ்வை இராமநாதபுரம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஜனாப்.ஆலம் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மஜக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர், நகர செயலாளர் நகர ஹபீப் ரஹ்மான் ஆகியோருடன் மஜக நிர்வாகிகள் உட்பட திரளான ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
இராமநாதபுரம் மாவட்டம்.
06.08.2017