ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்! மஜக கடும் கண்டனம்..!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை)

#காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத்தலைவர் #திரு_ராகுல்_காந்தி அவர்கள் குஜராத்தில் மழை – வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற போது , அவரது கார் மீது நடத்திய கல்லெறித்தாக்குதலில் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது.

இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு ஆறுதல் கூற வந்த ஒரு தேசிய தலைவரை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி, பிரதமர் மோடியை வாழ்த்தி தாக்குதல் நடத்தியிருப்பது  ஒரு கேவலமான அரசியலாகும். இதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பா ஜ க ஆளும் குஜராத் மாநிலத்தில் எதிர்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளும், மக்கள் நல செயல்பாடுகளும் முடக்கப்படுவதன் தொடர்ச்சியாகவே இச்செயலை பார்க்க முடிகிறது.

பா ஜ க உள்ளிட்ட காவி மதவாத சக்திகளிடம் அரசியல் சகிப்புத்தன்மையும், நாகரீகமும், பொறுமையும் குறைந்து வருவதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும், ஒரு பெரிய கட்சியின் தேசிய தலைவருக்கே, பாதுகாப்பற்ற ஒரு சூழல் உருவாகியிருப்பதற்கு நாட்டை ஆளும் பா ஜ க வின் செயல்பாடுகள் தான் காரணமாகும்.

அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்பதை இச்சம்பவம்
உறுதிபடுத்துகிறது.

இவண்
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
05.08.2017