கம்பம் மஜக அலுவலகத்திற்கு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வருகை..!

image

image

image

image

தேனி.ஆக.05., நேற்று (04/08/2017) தமிழக – கேரளா எல்லை பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண வருகை தந்த மாண்புமிகு தமிழக வருவாய் துறை அமைச்சர் R.B.உதயகுமார் அவர்களும்,

தேனிமாவட்ட செயலாலாளரும் ஆன்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ் செல்வன் அவர்களும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் S.T.K.ஜக்கையன் அவர்களும், தேனி மாவட்ட கம்பம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு வருகைதந்தனர்.

அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்களும் ,
மாநில செயற்க்குழு உறுப்பினர் கரிம் அவர்களும், துணை செயலாளர்களான காதர், ஜின்னா ஆகியோரும், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், பொருளாளர் அசிக் கனி , இளைஞரணி காஜா, மருத்துவரணி லியாகத் அலி, புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் நகர உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்ப்பு கொடுத்தனர்.

அதற்க்கு நன்றி கூறிய மாண்புமிகு அமைச்சர் R.B.உதயகுமார் அவர்கள் “நீங்கள் தமிமுன் அன்சாரி என்ற அருமையான சுய நலமற்ற தலைவரை பெற்றுள்ளீர்கள்” உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி புன்னகையுடன் விடைபெற்றார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தேனி மாவட்டம்.
04.08.2017