வேலூர் கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனைக் கூட்டம்…!

வேலூர்.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன்,
ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வேலூர் மாநகரத்தில் உள்ள கிளைகளை மறுசீரமைக்கப்படவேண்டும் என்றும், பல புதிய கிளைகள் அமைக்கப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரங்களில் (ஆர்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, விஷாரம் மற்றும் பல) இடங்களில் மஜக வலுப்படுத்தவேண்டும் என்றும் ஏகமனதோடு தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுவது,

டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இதை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மஜக சார்பாக வழங்குவது.

மேலும் வேலூர் மாநகரில் உள்ள பொது மக்களின் அன்றாட பிரச்சனைகளை கண்டறிந்து அரசின் வாயிலாக தீர்த்து வைப்பது.

இந்த அனைத்து தீர்மானங்களும் குறிப்பிட்ட நாட்களில் மிக விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேலூர் (கி) மாவட்டம்.
05.08.2017