சிறைக் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களுடன் மஜக இணை பொதுச் செயலாளர் சந்திப்பு…!

மதுரை.ஜூன்.02., கடந்த 14 வருடமாக சிறையில் இருக்கும் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அரசு தலைமை இராசாசி மருத்துவமனையில் வாரந்தோறும் செவ்வாய் – வெள்ளிக்கிழமைகளில் டயாலிஸ் செய்து வருகிறார்.

அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மதுரை தெற்கு மஜக மாவட்ட பொருளாளர் மைதீன் அவர்கள் உடன் இருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் அவரின் உடல் நலம் பற்றி பேசியது குறித்தும், அப்போது சிறைத்துறை அமைச்சர் சண்முகம் அவர்கள், மாற்று கிட்னி கிடைத்தால் அரசு மருத்துவமனையில் பொருத்தத் தயார் என்று அறிவித்ததையும் அவரிடம் இணைப் பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.

விரைவில் கட்சி சார்பில் மாற்றுக்கிட்னிக்கான வாய்ப்பு ஏற்படுத்தி, ஒத்துழைப்பு நல்கத் தயார் நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறப்பட்டது.
கட்சிக்கு தம் நன்றியை மீரான் மைதீன் பதிவு செய்தார்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
மதுரை தெற்கு மாவட்டம்
01.07.2017