ஆளியூர், பொரவச்சேரி குளங்களை பார்வையிட்ட நாகை சட்டமன்ற உறுப்பினர்…!

image

image

image

நாகை.ஜூன்.30.,நாகை தொகுதிக்குட்பட்ட ஆழியூருக்கு இன்று M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்கு பள்ளிவாசலுக்கு எதிரே உள்ள குளத்தை சீரமைத்து தரும்படியும், சாலைகளை மேம்படுத்தி தரும்படியும் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

பிறகு பொரவச்சேரி வள்ளலார் குளம் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். 9 ஏக்கர் பரப்பிலுள்ள அக்குளத்தை காவேரி.தனபால் அவர்கள் முன்னின்று தூர்வாரி வருகிறார்.
அப்பணியை பார்வையிட்டு, காவேரி.தனபாலுக்கு பாராட்டுக்களை கூறினார்.

இக்குளத்திற்கு படிக்கட்டுகளை அமைத்து தருவதாகவும் கூறினார்.

இக்குளம் தண்ணீர் நிரம்பினால், பொரவச்சேரி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதி மக்கள் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் வசதிகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
30.06.2017