ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் வன்முறை தூண்டும் விதமாக பேச்சு…மஜக உள்ளிட்ட கட்சிகள் காவல்துறையில் புகார்…

image

ராமநாதபுரம்.ஜூன்.29., நேற்று ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது அதில் பாஜக நிர்வாகிகள் சிலர் பேசும் பொழுது, இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதத்தவர்கள் மீது பொய்யான பல குற்றச்சாட்டுகைளையும், இந்திய இறையாண்மை, ஜனநாயகத்துக்கு எதிரான விஷம கருத்துக்களையும் பேசினர்.

தொடர்ந்து விசமக் கருத்துகளை  வெளியிட்டு வரும் பாஜக நிர்வாகிகள் மீது மனிதநேய ஜனநாயக கட்சி, விசிக, முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பாக தனித்தனியாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது.

மஜக சார்பில் இன்று மாவட்ட செயலாளர் இலியாஸ் தலைமையில் ராமநாதபுரம் B2 பஜார் காவல்நிலையம் சென்று மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் நசீர் அவர்களின் பெயரில் மனு கொடுக்கப்பட்டு பாஜக நிர்வாகிகள் மீது புகார் கொடுக்கப்பட்டு
வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாவட்ட துணைச்  செயலாளர்கள் சோனாப்பூர் அஜ்மல் மற்றும் பரமக்குடி பைசல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
ராமநாதபுரம் மாவட்டம்.
29.06.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.