மாட்டு அரசியல் – திண்டுக்கல்லில் மஜக கண்டன ஆர்ப்பாட்டம்…

image

image

image

image

திண்டுக்கல்.ஜுன்.04., நரேந்திர மோடியின் மத்திய பாஜக பாசிச அரசின் மாட்டு அரசியலைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் நேற்று 03.06.2017 சனிக்கிழமை மாலை 7-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் ஹபீபுல்லா தலைமையில் மாவட்ட  நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி சிறப்புரையாற்றினார். இணைப் பொதுச் செயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி கண்டன உரையைப் பதிவு செய்தார்.

தன் கண்டன உரையில், வளர்ந்துவரும் நாடு என்ற பட்டியலிலிருந்து இந்தியாவை உலக வங்கி தூக்கி எறிந்து விட்டது.. சிறந்த நாடுகள் பட்டியலில் 22வது இடத்தில் இருந்த இந்தியா 25வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டதையும் நினைவு கூர்ந்த அவர், நாட்டை முன்னேற்றம் செய்வதை விட்டு விட்டு மத்திய பாஜக அரசு மாட்டு அரசியல் செய்வதை கண்டித்தார்.

இந்த நிகழ்வில் முஸ்லிமல்லாத மக்களும், பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன் மாட்டிறைச்சியுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
திண்டுக்கல் மாவட்டம்.
#MJK_IT_WING
03.06.2017