வழக்கறிஞர்களின் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு..!

image
image

image

சென்னை.ஏப்.06., 24 நாட்களாக தமிழக விவசாயிகள் விவசாயியையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக இந்திய தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை ஆதரித்தும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி
உயர்நீதி மன்ற வாசலில்
உண்ணா நிலை போராட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு
வழக்கறிஞர் சங்கத் தலைவர் சா.ரஜினிகாந்த் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர்
M.தமிமுன் அன்சாரி MLA
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் CPI (M) ராமகிருஷ்ணன்,
CPI முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் திருநாவுக்கரசு, நாம் தமிழர் சீமான், SDPI தெகலான் பாகவி,
திராவிடர் விடுதலை கழகம் விடுதலை இராஜேந்திரன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் பி.ஆர்.பாண்டியன்,
மதிமுக சத்யா, மமக ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
சென்னை.
06.04.2017