காயல்பட்டினத்தில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…

image

image

தூத்துக்குடி.மார்ச்.01., நேற்று பிப்ரவரி 28-2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

காலையில் காயல்பட்டினம் நகர செயலாளர் S.M.ஜிப்ரி அவர்களின் தலைமையில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

அன்று மாலை காயல்பட்டினத்தில் மூன்று இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் நகர செயலாளர் S.Mஜிப்ரி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் காயல்பட்டினத்தில் மூன்று இடங்களில் கொடி ஏற்றிவைத்தார்.

இரண்டு இடங்களில் கொடி ஏற்றிவிட்டு மூன்றாவதாக புதிய பேருந்து நிலையம் முன்பு கொடி ஏற்றிவிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளை குறித்து விளக்கினார்.

இதில ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி.
(MJK IT-WING)
தூத்துக்குடி மாவட்டம்.
28.02.2017