You are here

திருவண்ணாமலை மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் தலைமையில், மாவட்ட பொருளாளர் சையத் அலி முன்னிலையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் அமீர் கான், IKP மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம், ஷாநவாஸ், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், நகர பொருளாளர் அம்ஜத்கான், நகர துணை செயலாளர் மன்சூர் மற்றும் சையத் அலீ, ஜான், அப்ரார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
19.12.2021

Top