You are here

ஜனவரி08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! மயிலாடுதுறை மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் நீடூர் நெய்வாசல் நகரம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் என்.எம்.மாலிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மல் உசேன், மிஸ்பாஹூதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நீடூர் குர்ஷித் கான், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் நீடூர் ஜெப்ருதீன் மற்றும் நிர்வாகிகள் இம்ரான்,ரியாஷீதீன்,மாலிக், சல்மான், சர்புதீன்,பஹத்,அசார்,நிஜாமுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
18.12.2021

Top