ஜனவரி.08 செங்கை தெற்கு வடசென்னை கிழக்கு மாவட்ட நேர்காணல்.. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக ஜனவரி 8, 2022 அன்று கோவையில் நடைபெறும் கோவை சிறை முற்றுகைக்கான ஆயத்தப் பணிகள் சென்னை மண்டலத்தில் தீவிரப்படுத்தப் பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொதுச் செயலாளர் அவர்கள். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரில் அழைத்து பணிகள் தொடக்கம், திட்டமிடல்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக வட சென்னை மாவட்டம் (கிழக்கு) செங்கம் மாவட்டம் (தெற்கு) ஆகிய மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும் பங்கேற்றார்.

கிழக்கு கடற்கரை சாலை (ECR) பழைய மகாபலிபுரம் சாலை (OMR) உள்ளிட்ட செங்கை தெற்கு மாவட்ட பகுதிகளிலும், வட சென்னை கிழக்கு மாவட்ட பகுதிகளிலும் அதிக அளவில் விளம்பரங்களை செய்வது என்றும், இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் வாகனங்களில் மக்களை திரட்ட பாடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதில் மாநில துணைச் செயலாளர் ஷமீம், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், செங்கை தெற்கு மாவட்ட செயலாளர் கல்பாக்கம் அப்துல் ரஷீத், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் தாரிக் உள்ளிட்ட இதர மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ReleaseLongTermPrisoners
#தலைமையகம்
15.12.2021