You are here

கோவை காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08, அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10, ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

அது தொடர்பாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதிப் குமார், அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் ஜன 08, அன்று நடைபெற உள்ள கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் தொடர்பான கடிதத்தை ஆணையரிடம் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, ஆகியோர் உடனிருந்தனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongtermprisoners

தகவல்,

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
14.12.2021.