ஜனவரி_08 கோவை சிறை முற்றுகை போராட்டம்! ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..

டிச:15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்க்கு வருகை தரும் பொது செயலாளரை சிறப்பாக வரவேற்பது எனவும், மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ்,பக்கீர் முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திலிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சபர் அலி, பகுதி செயலாளர்கள் ஜாவித்,ஹாரிஸ்,மீரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
14.12.2021