சிறைவாசிகள் விடுதலை குறித்து கோரிக்கை! கோவையில் தமிழக முதல்வருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!

பல்வேறு நிகழ்ச்சிக்காக கோவை வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவர்களை கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளரும் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சுல்தான் அமீர், மற்றும் ஒருங்கி ணைப்பாளர்கள் இனாயத்துல்லாஹ் ஹாஜியார், சகோதரர் சாதிக் அலி, ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள 700 சிறைவாசிகள் விடுதலை ஆணையில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாதது சிறுபான்மை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்து சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் ஜாதி, மத, வழக்கு, பேதமில்லாமல் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான ஆவணங்களையும் தமிழக முதல்வரிடம் வழங்கினனர்.

கோரிக்கைகளை விரிவாக கேட்ட தமிழக முதல்வர் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மற்றும் அனைத்து கட்சி, இயக்கங்களின், நிர்வாக பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
23.11.2021