தாம்பரம் அனாங்காபுத்தூர் பல்லாவரம் ஆகிய பகுதிகளில்… வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் விநியோகித்த மஜகவினர்..!

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கன மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கிட் தாம்பரம், பல்லாவரம், அனங்காப்புத்தூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் ஜாகிர் தலைமையில் மஜகவினர் விநியோகித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது, அனகை நகர செயலாளர் சாதிக், பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், அனகை நகர பொருளாளர் இஸ்மாயில், பல்லாவரம் நகர துணை செயலாளர் அக்பர் அலி மற்றும் ஜெகதீஷ், மோகன், ஷாம், கார்த்திக், மணிகண்டன், சாகுல் ஹமீது, நாகராஜ், விக்னேஷ், விஜி, முத்து, சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் நிகழ்வில் நிவாரண பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு
12.11.2021