You are here

விழுப்புரம் மஜக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் J.S.M.சௌகத் அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் S.A.அபுதாஹிர், P.R.S. நாசர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விழுப்புரம்_தெற்கு_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers #MjkStandWithFarmers

Top