You are here

குடந்தையில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..! மஜகவினர் பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது இப்ராஹிம், மேலக்காவேரி பகுதி செயலாளர் அபுதாஹிர், மஜக ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers #MjkStandWithFarmers

Top