You are here

மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு நிகழ்வாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சார்பாக கோட்டைப்பட்டிணம் செக்போஸ்டில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் சுபைர்கான் முன்னிலை வகித்தனர்.

இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் ஹத்தாப், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வசீம் அக்ரம், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தனபால், கிளை செயலாளர் தாஜ்தீன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தமீம் அன்சாரி, மருத்துவ சேவை அணி ஒன்றிய செயலாளர் ஜவாஹிர்தீன், இளைஞரணி கிளை செயலாளர் ஷமீம், இளைஞரணி கிளை துணை செயலாளர் பாஷில், மாஸ்டர் இத்ரீஸ்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

#Istandwithfarmers
#mjkstandwithfarmers

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
27.09.2021

Top