பொள்ளாச்சி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக மஜக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம் சார்பாக நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இசாக், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் பதுருதீன், மற்றும் மாவட்ட, நகர, வார்டு, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றிய, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாவட்டம்
27.09.2021