திருக்கோவிலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து திருக்கோவிலூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மஜக மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் s.ஜாவித் அவர்கள் தலைமை தாங்கி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார். மேலும் தோழமை கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திருக்கோவிலூர் நகர செயலாளர் s.சாதிக் பாஷா மற்றும் நகர பொருளாளர் B. ஜாகீர்உசேன் மற்றும் நகர துணை நிர்வாகிகள், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்தனர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
27.09.2021