நீட் தேர்வு விவகாரம் கோவையில் மாணவர் இந்தியா துண்டுப்பிரசுரம் வினியோகம்!

image

image

கோவை.ஜூலை.26., நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் மாதிரி துண்டுப்பிரசுரத்தை கோவை மாநகர் மாவட்ட மாணவர்  இந்தியா செயலாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள்
மாணவர்களுக்கு வினியோகம் செய்தனர்.

இந்நிகழ்வில் மாணவர் இந்தியா நிர்வாகிகள்  அனிரூத், விபினேஷ், நவ்பல், அபு, சதீஷ் ஆகியோர் கோவை கிருஷ்ணா கல்லூரி, ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் ஹோப்காலேஜ் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வினியோகம் செய்தனர்.

இன்று மட்டும் 1000பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது . மாணவர் இந்தியா நிர்வாகிகளின்
இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்
மிகுந்த வரவேற்பு அளித்துவருகிறார்கள்!

தகவல்:
ஊடகபிரிவு
மாணவர் இந்தியா
கோவை மாநகர் மாவட்டம்
26.07.17