தோப்புத்துறையில் மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்து குடியரசு தினவிழா உற்சாகம்!


ஜன.26,

நாட்டின் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் வேதை நகரம் மற்றும் மருதநாயகம் ஆட்டோ ஒட்டுநர் சங்கம் சார்பாக இந்திய தேசிய கொடியை வர்த்தகர் சாவண்ணா சாதிக் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மஜக மாவட்ட துணை செயலாளர் சேக் அஹமத்துல்லாஹ் முன்னிலை வகிக்க, MSF தலைவர் இம்தியாஸ் அஹமது வரவேற்புரையாற்றினார்.

மேலும் தோப்புதுறை முஸ்லிம் ஜமாத் மன்றம் தலைவர் ஜபருல்லாஹ்கான் மற்றும் இந்து நற்பணி மன்றம் முன்னாள் தலைவர் வை.சுப்பரமணியன் ஆகியோர் அங்கு வருகை தந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.

இதனை தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் தொகுத்து வழங்கினார்.

இதில் ஊர் பொதுமக்கள், ஒட்டுநர் சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் மஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாணவர் இந்தியா நிராஸ் முழக்கம் எழுப்ப தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட பொருளாளர் முபீன் நன்றி கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.
26.01.2021