பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் (பாரத் பந்த்) அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) மாவட்ட துணைச்செயலாளர் ஜஹாங்கீர் பாஷா தலைமையில் நகர நிர்வாகி செய்யது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6 மணியளவில் விடுதலையாகினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பெரம்பலூர்_மாவட்டம்
27.09.2021

#IStandWithFarmers #MjkStandWithFarmers