உதகையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்…!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு நிகழ்வாக மஜக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகை நகரம் சார்பாக அனைத்து கட்சிகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் கமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத் கண்டன உரையாற்றினார்,

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக், மாவட்ட பொருளாளர் காலிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான் மாவட்ட துணைச் செயலாளர் அதிப், மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் தப்ரேஸ், உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
27.09.2021