மதுரை மாநகரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அவர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகரில் அனைத்து கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹீம், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் மஜீத், சுலைமான், விவசாய அணி மாவட்ட செயலாளர் சோனை, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் கான், இளைஞரணி மாவட்ட செயலாளர் சையது அலி, சதாம் உசேன், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#Istandwithfarmers
#mjkstandwithfarmers

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாநகர்_மாவட்டம்
27.09.2021