பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகநாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை வடக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, அவர்கள் தலைமையில் மஜக வினர் பாபநாசம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்சா, கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
27.09.2021