திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சார்பாக சிங்களாஞ்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் அப்துல்லா, அவர்கள் தலைமையில் விவசாய அணி மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை முழங்கினர்.

#Istandwithfarmers
#mjkstandwithfarmers

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
27.09.2021