மேலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுவிவசாயிகள் போராடி வருகிறார்கள்.

அதற்கு ஆதரவாக மதுரை மாவட்டம் மேலூரில் அனைத்து கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி, அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட பொருளாளர் செந்தில், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் செய்யது மஸ்தான், மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் மஸ்தான் கனி, அசாருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ஜபருல்லா, கலீல் அஹமது, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

#Istandwithfarmers
#MJKstandwithfarmers

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_புறநகர்_மாவட்டம்
27.09.2021