அந்தியூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக வினர் போராட்டம்!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக செப் 27. நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்க ப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகரத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.k.ஷானவாஸ் அவர்கள் தலைமையில், தகவல் தொழிநுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஷபி, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மற்றும் அப்பாஸ், நகர செயலாளர் மைதீன்பேக், நகர பொருளாளர் நிஜார் முகமது, நகர துணை செயலாளர்கள் பிலால், பர்க்கத் துல்லா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்குமாவட்டம்
27.09.2021