மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இரயில் மறியல்..! மஜகவினர் திரளாக பங்கேற்பு..!

ஒன்றிய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதற்கு ஆதரவாக மயிலாடுதுறையில் அனைத்து விவிசாய சங்கங்களின் சார்பாக நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில், திரளான மஜக வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான், குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா சலீம், அஜ்மல் உசேன், நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் அசேன் அலி, விவசாய அணி மாவட்ட செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக வினர் திரளாக கலந்துக் கொண்டனர்.

#IStandWithFarmers
#MjkStandWithFarmers

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
27.09.2021