பேராவூரணியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜக விவசாய அணி மாநில செயலாளர் பங்கேற்பு..! திரளானோர் கைது!

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இன்று நாடு தழுவியளவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடை வீதிகளில் அனைத்து கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகள் அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், அவர்கள் தலைமையில் மஜக வினர் பேராவூரணி சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மாவட்டம்
27.09.2021