நாச்சிக்குளத்தில் ரயில்வேதுறை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி! மஜக சார்பில் கையெழுத்து இயக்கம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!

திருவாரூர் மாவட்டம் நாச்சி குளத்தில் ரயில்வே துறை சார்ந்த மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் முகமது,அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், அவர்கள் பங்கேற்று ரயில் நிலையத்தில் செய்யவேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து உரையாற்றினார்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,தோழமை கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருவாரூர்_மாவட்டம்
21.09.2021