மத உணர்வுகளை கொச்சை படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஜகவினர் புகார் மனு! புகார் மனுவின் அடிப்படையில் சென்னையில் சிவக்குமார் கைது!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் S. பிஜ்ருள் ஹபீஸ், தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடந்த 18.09.2021 அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில்,

இஸ்லாமியர்களின் நம்பிக்கையை கேலி செய்தும், இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தியும், இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக கருத கூடிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை பற்றி அருவருக்கதக்க வகையில் பேசி வீடியோ வெளியிட்ட கயவன் யோகா குடில் சிவகுமார், மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரகுமான், அமீர் கான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநகர செயலாளர் மஹீன் இப்ராஹிம், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அப் புகாரின் அடிப்படையில் தற்போது யோகக்குடில் சிவக்குமார், கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
18.09.2021