மஜக கானத்தூர் கிளை பொதுக்குழு கூட்டம்.!மாநில துணைச்செயலாளர் பல்லாவரம் ஷஃபி பங்கேற்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் பகுதிக்குட்பட்ட கானத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பகுதி செயலாளர் அப்துல் சமது தலைமையில் இன்று நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி, மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிளையின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக வாணியம்பாடியில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட மஜக-வின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் அவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌனமாக எழுந்து நின்று துயரை வெளிப்படுத்தினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் L.தில்ஷாத், மாவட்ட துணைச் செயலாளர்கள் ECR N.அப்துல் சமது, கண்டோன்மெண்ட் H.அப்துல் சமது, செங்கை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் திருப்போரூர் ரபிக் மற்றும் மாவட்ட அணி நிர்வாகி அரங்கை A. முஸ்தபா, நகர நிர்வாகிகள் H.சேக் தாவூத், A.தமீனா, கானத்தூர் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு
12.09.2021