வாணியம்பாடி வசீம் அக்ரம் படுகொலை..!!நல்லடக்கத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று இரவு சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவருடைய ஜனாசா தொழுகை இன்று (11.09.2021) வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி திடலில் நடைபெற்றது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அவருக்காக பிரார்தித்தனர்.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரசீது மற்றும் அவைத்தலைவர் S.S.நாசர் உமரி, துணை பொதுச்செயலாளர்கள் சையத் பாருக் அஹ்மத், மண்டலம் ஜெய்னுல் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர், ஜனாசா தொழுகைக்கு பின் வசீம் அக்ரம் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.

உடன் மாநில துணைச்செயலாளர் அப்சர்சையத், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருல் ஜமா, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்
11.09.2021