மஜக நாகை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு!!

செப்.04, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் தலைமையில் நாகூரில் நடைப்பெற்றது.

புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அண்ணா பிறந்த நாளான செப்.15 முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி முன்விடுதலை செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அ.ஷேக் மன்சூர், திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஷி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, முகம்மது சபுருதீன், அணி நிர்வாகிகள் முகம்மது சுல்தான், முகம்மது ஜெக்கரிய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.