ஆதி திராவிடர் நலப்பள்ளிக்கு கணினி வழங்கிய_மஜக..!

கடலூர் மாவட்டம், எள்ளேரி சாட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கணினி (கம்ப்யூட்டர்) இல்லாமல் இருப்பதாகவும், அப்பள்ளி மேம்பட கணிணி மிக அவசிய தேவை என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஜக சார்பு அமைப்பான MJVS மாவட்ட செயலாளரும், எள்ளேரி ஊராட்சிமன்ற துணை தலைவர் AMK.முஹம்மது ஹம்ஜா அவர்களிடம் கேட்டு கொண்டார்.

அதனடிப்படையில், பல்வேறு சேவைகள் செய்து வரும் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாவட்ட செயலாளர் AMK. முஹம்மது ஹம்ஜா தனது சொந்த நிதியில் கணினியை வழங்கினார்.

இந்நிகழ்வில், மஜக மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், எள்ளேரி நிர்வாகிகள் முஹம்மது இல்யாஸ், ஜமால் முஹம்மது, பைசல் மீரான், ராஜ் முஹம்மது, ஹாரிஸ், ஜசிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.