மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து! நெல்லையில் மஜக விவசாய அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி சார்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதை கண்டித்தும், ஒன்றிய அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நெல்லை வண்ணார்பேட்டை செப்பாண்டியன் பாலத்தின் கீழ் ஆர்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்விற்கு நெல்லை மாவட்ட விவசாய அணி செயலாளர் நெல்லை ஜாகிர் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் வீ.கே.புரம்.செய்யது அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் ராபியாசேக், பத்தமடை கனி, ஹபிபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கண்டன உரையாற்றினார், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

மேலும் கோதர், புல்லட்கனி, ஐடிஐ.சங்கர், சம்சு, ஆதிமூலம், நாகராஜன், பீர், பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
08-08-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.