கோவை நாசர்பாய் சுகவீனம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் நலம் விசாரிப்பு!

ஆகஸ்ட்.01., மஜகவின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர் பாய், அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்போது கோவையில் உள்ள தனது வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

இன்று அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் சத்தி.செய்யது முகம்மது பாரூக் அவர்களும் உடன் சென்றார்.

முன்னதாக MJTS மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி, மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், ஆகியோரின் தந்தையின் மரணத்தையொட்டி அவரது வீட்டுக்கு அனைத்து நிர்வாகிகளுடன் சென்று ஆறுதல் கூறினார்.

பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் மஜக நிர்வாகி இப்ராகிமை, அவரது இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தார்.

அது போல் கொரோனா முன்கள சேவையில் பாதிக்கப்பட்ட இரட்டை சகோதரர்கள் வளையல் இப்ராஹிம், பாருக், ஆகியோரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

பிறகு செல்வபுரம் கிளை அலுவலகத்திற்கு வந்து 77 மற்றும் 78 வது வார்டு மஜக நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் பொதுச் செயலாளர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூ காஜா, அக்கீம், இப்ராஹிம் EBR, சேட்டு, மற்றும் 77,78,கிளை செயலாளர்கள் பீர்முகம்மது, யூசுப், பொருளாளர்கள் இஸ்மாயில், செமீர், துணை செயலாளர் கமால்பாஷா, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
01.08.2021