திருவல்லிக்கேணியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்..!

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், திருவல்லிக்கேணியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் முன்னிலையில் லத்தீப் தலைமையிலான இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கி வரவேற்றார்.

இந்நிகழ்வில் பகுதி செயலாளர் சலீம், பொருளாளர் ஷேக் மற்றும் தொழிற்சங்க நிர்வாகி ஆட்டோ கரீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்தியசென்னை_கிழக்கு
11.07.2021

https://m.facebook.com/story.php?story_fbid=3573295429436873&id=700424783390633