மஜக திட்டச்சேரி பேரூர் சார்பில் சுகாதாரப் பணிகள்

ஏப்.04,
நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டச்சேரி பேரூராட்சியில் மஜக சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் நல திட்டங்கள் பேரூர் செயலாளர் இப்ராஹிம் தலைமையிலும், பொருளாளர் சதாம் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான் ஒருங்கிணைப்பிலும் நடைப்பெற்று வருகிறது.

சுமார் இரண்டு நாட்களாக தொடர்ந்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க ‘கபசுர குடிநீரை வீடுவீடாக சிறுசிறு குழுக்களாக பிரிந்து சென்று வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர்.

அதை போன்று மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூடுமிடங்களிலும், தெருக்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ‘கிருமி நாசினி’ தெளித்து வருகின்றனர்.

மேலும், மருத்துவம் உள்ளிட்ட அவரசகால வழிகாட்டல்களையும், நோய்களிலிருந்து தற்காத்து கொள்ள வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்.