ஆதலையூர் மற்றும் மஞ்சக்கொல்லை கிராமசபா கூட்டத்தில், CAAவுக்கு எதிராக தீர்மானத்தை முன் மொழிந்த மஜக!

ஜன.26,
நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதலையூரில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், பங்கேற்ற மஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன் மொழிந்து மனு அளித்தனர்.

இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முன்ஷி யூசுப்தீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் நிசாத், ஆதலையூர் கிளை செயலாளர் பாவா, சமிம், சிராஜ், சிபான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைப்போல், நாகப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை ஊராட்சியில் நடைப்பெற்ற கிராமசபா கூட்டத்திலும் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை முன்மொழிய வலியுறுத்தப்பட்டது. இதில், நாகை ஒன்றிய பொறுப்பாளர் மஞ்சை சதாம், கிளை செயலாளர் ஷேக்அலி உள்ளிட்ட மஜகவினர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.