மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாட்டில் குடியுரிமை பறிப்பு சட்டத்திற்கெதிரான ஆலோசனைக் கூட்டம்.! தைமிய்யா பங்கேற்பு.!

சென்னை.ஜனவரி.14.,

மக்கள் ஒற்றுமை மேடை ஏற்பாடு செய்த அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் CAA, NRC, NPR போன்ற சட்டத்திற்கெதிரான போராட்த்தை மேலும் வீரியமடைய செய்வது குறித்தான ஆலோசனை நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா கலந்து கொண்டு பேசுகையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக-வின் சட்டமன்ற நிகழ்வையும், முதல்வர் சந்திப்பு, மஜக நடத்திய போராட்டக்களத்தை பற்றியும் விரிவாவக விளக்கினார். மேலும் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், மஜக மாநில துணைச் செயலாளர் சமீம் அஹமது, மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை.
14-01-2020