காட்டுப்பூக்களின் வாசம் வீசட்டும்! முதமிமுன் அன்சாரி MLA பொங்கல் வாழ்த்து!

உலக தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாக பொங்கல் திருநாள் போற்றப்படுகிறது..

விவசாயத்தை முன்னிறுத்தும் இயற்கை பண்டிகை என்ற அளவில் இது தமிழர்களால் உளப்பூர்வமாக மதிக்கப்படுகிறது.

கதிர்கள் நிறைந்த நெல் வயல், வாழைத்தோப்புகளின் பசுமை, கரும்பு தோட்டங்களின் எழில் என விவசாயிகளின் மனம் பூரிக்கும் வகையில் செல்வம் குவிந்து, அதன் வழியே உற்சாகமாய் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்திருநாளில் நிலம், நீர், வனம் போன்ற இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும், சுற்றுச்சூழல் நலன்கள் பேணப்படவும், உயிரினங்களின் உரிமைகள் மதிக்கப்படவும் உறுதி ஏற்போம்.

தொடர் விடுமுறைகள் மூலம் பொங்கல் திருநாளை உற்சாகமாய் கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் காட்டுப் பூக்களின் வாசம் வீசட்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
14.01.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.