தென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!

சென்னை.நவ.03..,மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயல் வீரர் கூட்டம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா அவர்களின் தலைமையில் நேற்று (02.11.2018) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது.

இதில் வருகின்ற டிசம்பர் 6 பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பை வழங்க கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 8 விமான நிலையங்களை முற்றுகை போராட்டம் நடத்த தலைமை முடிவெடுத்துள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையம் முற்றுகை சம்மந்தமாக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்களிடம் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து போராட்ட களத்திற்கு மக்களை திரட்டுவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயளாலர் J.சீனி முஹம்மது, கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாலர் குணங்குடி J. S மீரான், மாவட்டப் பொருளாளர் காஜா ஷரிப், மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது கனி, வசீம், வர்த்தகர் அணி செயலாளர் ஜலீல், தொழிலாளர் அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் பல்வேறு கட்சிகளில் இருந்தும் பாசிப்பட்டிணத்தை சேர்ந்த அப்பாஸ், ஜபருல்லாஹ் கான் மற்றும் பாக்கர் ஆகியோரின் தலைமையில் 10 க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மஜக மாநிலச் செயலாளர் சீனி முஹம்மது அவர்களின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

தகவல்:
#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்_சென்னை_மேற்கு
03.11.2018